News August 7, 2024
விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விக்கிரவாண்டி, பொன்னங்குப்பம், கொட்டியாம்பூண்டி, சித்தனி, பேரணி, ஆவுடையார்பட்டு, பாப்பனபட்டு, முண்டியம்பாக்கம், சாத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்ததா?
Similar News
News December 16, 2025
விழுப்புரம்: ஓடையில் கிடைத்த சடலம் !

செஞ்சி அருகே மேலெடையாளம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்ற ராதா (60) என்பவர், அதே ஊரில் உள்ள ஓடையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவர் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 16, 2025
விழுப்புரம்: விளக்கு ஏற்றிய பெண் உடல் கருகி சாவு!

செஞ்சி அருகே உள்ள நங்கிலிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா கடந்த 4-ம் தேதி வீட்டில் விளக்கு ஏற்றியபோது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர், செஞ்சி அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
News December 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


