News December 29, 2024
விழுப்புரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

விழுப்புரத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று மாலை இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள்அவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மணி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 30 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய விசிக!

விழுப்புரம்: புரட்சி பாரதம் கட்சியிலிருந்து விலகி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வழக்கறிஞர்கள் நேற்று(மார்ச் 9) இணைந்தனர். இவர்களை, விச்கவின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார், வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொடர்கள் பலரும் உடன் இருந்தனர்.
News March 10, 2026
விழுப்புரத்தில் பயங்கர விபத்து!

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்துப் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சிவராஜ்(38). சம்பவத்தன்று இவர், தனது மனைவி சியாமளாதேவி(35), மகன் சாய் சரவணன்(3) ஆகியோருடன் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது பைக்கில் புறப்பட்டார். வளவனூர் அருகே, கோவையைச் சேர்ந்த அபிஷேக்(33) ஓட்டி வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த சிவராஜ், சியாமளா தேவி, சரவணன் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
News March 10, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


