News August 26, 2025

விழுப்புரத்தில் மக்கள் நீதிமன்றம்

image

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் தேசிய அளவில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடக்க இருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கேட்டுகொண்டுள்ளார்.

Similar News

News August 27, 2025

இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை இங்கே<> கிளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளலாம். எந்த ஊர், என்ன பூஜை, என்ன படையல் உள்ளிட்ட விவரங்களோடு செய்தியாக பதிவிடுங்கள். அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

News August 26, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை காணலாம்.

News August 26, 2025

விழுப்புரம் விநாயகர் பற்றிய வரலாறு குறிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே ஆலகிராமம் உள்ளது, இங்குள்ள பழமை வாய்ந்த எமதண்டீஸ்வரர் கோயிலில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த விநாயகர் சிற்பத்தில் வட்டெழுத்து கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் இன்று (26) கூறியுள்ளார்.

error: Content is protected !!