News August 12, 2025
விழுப்புரத்தில் பெரும் அதிர்ச்சி…

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி – ஜூன் வரை விழுப்புரத்தில் 7,936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. உங்கள் பகுதியில் நாய் தொல்லை இருந்தால் உடனே விழுப்புரம் நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். SHARE IT
Similar News
News August 12, 2025
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் செ.குன்னத்தூர் கிராமத்தில் மக்கள் வசிக்கும் தெருக்களில் கழிவுநீர் தேங்கி, குடிநீருடன் கலந்துள்ளதால் 30க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குன்னத்தூர் கிராம மக்கள் இன்று(ஆக.12) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
News August 12, 2025
விழுப்புரத்தின் இந்த அதிசயம் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் பல்லவர்களின் கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் குடைவரைக் கோயிலின் வரலாறு தெரியுமா? குடைவரைக் கோயில் என்பது பெரும் பாறையை குடைந்து சென்று அதில் அமைக்கப்படும் கோயில் ஆகும். கோயிலில் அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் இரண்டும் வேறுபட்டு காட்சியளிக்கும். ஒரு முறையேனும் இங்கு சென்று பார்க்கவேண்டும் என உங்கள் நண்பருக்கு இதை ஷேர் செய்து அழைத்து செல்லுங்கள்
News August 12, 2025
அரசு மருத்துவக்கல்லூரியில் எம்எல்ஏ ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா இன்று (ஆக.12) அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை RMO.Dr.ரவிக்குமார், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.