News August 15, 2025
விழுப்புரத்தில் புதிய தாழ்தளப் பேருந்துகள் விரைவில் இயக்கம்

விழுப்புரம் கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 புதிய தாழ்தளப் பேருந்துகளில் 10 பேருந்துகளுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றில் 3 பேருந்துகள் விழுப்புரம் தலைமை அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளுக்கு வழித்தட அனுமதி கிடைத்தவுடன், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 15, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் மானியத்துடன் புல்நறுக்கும் இயந்திரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2025-2026 நிதியாண்டில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மின்சார புல் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 150 பயனாளிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
News August 15, 2025
விழுப்புரம்: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <
News August 15, 2025
விழுப்புரம் மக்களே உஷாரா இருங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 35 நபர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இதில் 42 லட்சத்து 50,755 ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால், 0422-2300600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது இந்த <