News February 12, 2026

விழுப்புரத்தில் பரிதாப பலி!

image

சேலத்தைச் சேர்ந்தவர் ஹரி(48). இவர், 5 ஆண்டுகளாக விழுப்புரத்தில் வெல்டிங் வேலை செய்து வந்தார். உடல் நல பாதிப்பால், மாத்திரை சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று நகராட்சி மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தவரை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 13, 2026

விழுப்புரம்: தூக்கில் தொங்கிய பெண் காவலர்!

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 2024ஆம் ஆண்டு காவலர் சிலம்பரசனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காவல் குடியிருப்பில் வசித்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் கொண்ட சிலம்பரசன் அவரைத் துன்புறுத்தி வந்துள்ளார். மனஉளைச்சலுக்கு ஆளான புவனேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News February 13, 2026

விழுப்புரத்தில் 242 மாற்றுத்திறனாளிகள் கைது!

image

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், விழுப்புரத்தில் நேற்று(பிப்.12) மூன்றாவது நாளாக போராடிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

News February 13, 2026

திண்டிவனம்: அரசு அதிகாரி அதிரடி கைது!

image

திண்டிவனம் அருகே நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(29). விவசாயியான இவர், தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற வணிக ஆய்வாளர் ரேகாவை(40) அணுகினார். அவர், அதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை வைத்து அதிகாரியை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

error: Content is protected !!