News March 28, 2024
விழுப்புரத்தில் நாதக, பாமக வேட்பு மனுக்கள் ஏற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை வேட்பாளருக்கான மனுக்கள் சரிபார்த்தல் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி தலைமை தாங்கினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
Similar News
News February 25, 2026
விக்கிரவாண்டியில் விஷம் குடித்து தற்கொலை!

விக்கிரவாண்டி: கல்யாணம்பூண்டியை சேர்ந்தவர் யுவராஜ் (42). திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் பூச்சிமருந்தை எடுத்து குடித்துவிட்டார். அவரை மயங்கிய நிலையில், அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 25, 2026
விழுப்புரம்: தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த சிறுவன்!

மயிலம்: சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மகன் குருஷித் (9). இவர் நேற்று முன்தினம் காணாமல் போனதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில், நேற்று வீட்டின் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை கிளம்பியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 25, 2026
விக்கிரவாண்டியில் சிறுவன் பரிதாப பலி!

விழுப்புரம்: கொட்டியாம்பூண்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் வெற்றி குணவேல் (11) நேற்று முன்தினம் வீட்டின் முன் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தில் சிக்கி இறுகியது. தொடர்ந்து பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


