News February 21, 2026

விழுப்புரத்தில் துணிகரத் திருட்டு!

image

விழுப்புரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவர் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தினருடன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இதை அறிந்த மர்ம நபர்கள் இரவு பீரோ உடைத்து 25 பவுன் நகை மற்றும் ரூ.55 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளை அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 21, 2026

விழுப்புரம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

விழுப்புரம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News February 21, 2026

தங்கக் குடத்தில் பால் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம்

image

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் இன்று (பிப்.21) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அதிகாலை அம்மனுக்கு தங்க குடத்தில் 108 லிட்டர் பால் மற்றும் 108 லிட்டர் இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News February 21, 2026

விழுப்புரத்தில் இருவர் அதிரடி கைது!

image

கெங்காராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் எடுத்து செல்வது தெரியவர இதனை விசாரணை செய்ததில் புதுச்சேரி மாநிலம் பங்கூர் செல்வா நகரை சேர்ந்த பாலசுந்தரம் பிரகாஷ் இருவரும், 1200 புதுச்சேரி முதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!