News January 25, 2026

விழுப்புரத்தில் சோகம்: வயிற்று வலியால் தற்கொலை!

image

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி, நீண்டகால வயிற்று வலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அவர் உட்கொண்டார். முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

விழுப்புரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

கடலூரைச் சேர்ந்தவர் ஜெசிப்பிரியா(22). இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தராஜ்(25) என்பவருக்கும் கல்லூரியில் காதல் மலர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.1) மாலை, ஜெசிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 1, 2026

விழுப்புரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, விழுப்புரம் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 944930680-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

விழுப்புரம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04146-259216) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!