News September 24, 2025
விழுப்புரத்தில் சொத்து தகராறில் சித்தி கொலை

விழுப்புரம் மாவட்டம், துறிஞ்சிப்பூண்டியில் கிணற்றில், முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது, ஜெயக்கொடியின் கணவரான பழனிவேலுவின் முதல் மனைவியின் 2வது மகனான பிரகாஷ்ராஜ் என்பதும் தெரியவந்துள்ளது. சொத்துத் தகராறில் தனது சித்தியை அடித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 24, 2025
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் என்பவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கியதால் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
News September 24, 2025
10.5% இட ஒதுக்கீடு: டிசம்பரில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக முழுவதும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும் என விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News September 24, 2025
விழுப்புரம்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் போராட்டம்

விழுப்புரம் தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில் இளைஞர்களைக் கொண்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இந்தப் போராட்டங்கள் நடக்கும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அன்புமணி டிச.17 சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், ராமதாஸின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது