News January 12, 2026
விழுப்புரத்தில் கொடூரத்தின் உச்சம்!

விழுப்புரம், கண்டமானடியில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாபு, உணவு சமைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தனது மகள் வைஷ்ணவியை 17 சுவரில் தலையை மோதி கொடூரமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்து 26 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பாபு மீதான வழக்கை, போலீசார் தற்போது கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
விழுப்புரம்: B.E/ B.Tech/ M.Sc/ MBA முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News January 26, 2026
வீர செயல் புரிந்த காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்

விழுப்புரம் நகராட்சி, கீழ்ப்பெரும்பாக்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர், வீர செயல் புரிந்த காவல் துறை அலுவலர்களுக்கு பதக்கங்களை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (ஜன.26) வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், உட்பட பலர் உள்ளனர்.
News January 26, 2026
விழுப்புரத்தில் 77வது குடியரசு திருவிழா

நாட்டின் 77வது குடியரசு திருவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு ஆணையத்தில் உள்ள மைதானத்தில் மூவர்ண கொடியை ஏற்றி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வைத்தார்.
இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதி மணிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க. பொன்முடி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அருளரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


