News August 21, 2025
விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறும். இதில், 8th, SSLC, 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த <
Similar News
News August 21, 2025
விழுப்புரம்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால், இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
தரமான நெல் விதைகளை விநியோகிக்க அறிவுறுத்தல்

விழுப்புரத்தில் சம்பா பருவத்திற்கு தரமான சான்று பெற்ற நெல் விதைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்க விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் அறிவுறுத்தியுள்ளார். எனவே அனைத்து தனியார் மொத்த சில்லறை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கவும், அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
News August 21, 2025
மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிடுள்ள செய்தி, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு மாநில ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.மனநலம் மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ பெறலாம். இது பற்றி கூடுதல் விபரம் அறிய 044 26420965 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.