News July 9, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை 1/2

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், விழுப்புரத்தில் மட்டும் 31 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (04146-226417) தொடர்பு கொள்ளவும். SHARE IT தொடர்ச்சி
Similar News
News September 22, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.21 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
மரக்காணத்தில் UPSC ஊக்குவிப்புப் பயிற்சி முகாம்

இந்திய ஆட்சிப் பணி (UPSC) தேர்வர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட விழிப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர் குமரவேல் ஒருங்கிணைத்த இந்தப் பயிற்சி முகாமை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தொடங்கி வைத்துப் பேசினார். துணை கண்காணிப்பாளர் உமாதேவி, ஆய்வாளர் பரணிநாதன், பயிற்சியாளர் அழகு முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News September 21, 2025
இரா.லட்சுமணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் சதீஷ் தலைமையில் 25 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.