News March 30, 2025

விழாக்கோலம் பூண்டுள்ள சிவகாசி

image

சிவகாசியில் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான பங்குனி பொங்கல் விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறும். இதில் ஏப்.6 அன்று பொங்கல் விழாவும், ஏப்.7 கயிறு குத்தும் விழாவும், ஏப்.9 தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதனால் சிவகாசி தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.

Similar News

News April 1, 2025

விருதுநகரில் வேலைவாய்ப்பு  முகாம்

image

விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாம் 09.04.2025 அன்று காலை 8.30 மணி முதல் விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிராமத்தில் உள்ள அல் அமீன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வேலைத்தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் 

News April 1, 2025

விருதுநகர்: நிலப்பிரச்சனைகளை தீர்க்கும் கோவில்

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் திருமேனிநாதர் கோவில் உள்ளது. இங்கு திருமேனிநாதர், பூமிநாதர் இறைவனாகவும், துணைமலைநாயகி இறைவியாகவும் உள்ளனர். இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது நம்பிக்கை. அதேபோல இங்கு வழிபட்டால் முன்னோர்களின் சாபம், நிலப் பிரச்சனைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

News April 1, 2025

விருதுநகரில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப். 4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!