News April 23, 2025

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நாள்:மே.5 மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

தென்காசி: இன்று இங்கெல்லாம் மின்தடை..!

image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பாவூர்சத்திரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், குறும்பலாச்சேரி, நாடார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிபட்டி, சின்னநாடனூர், திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, வடகரை, அச்சன்புதூர், பண்பொழி உள்ளிட்ட சுற்று பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

News September 16, 2025

தென்காசி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

தென்காசி: கடன் தொல்லையால் விஷமருந்தி தற்கொலை..!

image

ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சானை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்ததால், குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்ததில் உயிரிழந்தார். ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!