News December 17, 2025
வில்வித்தி: வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் திருட்டு!

வில்வித்தி கிராமத்தைச் சேர்ந்த கலைமணி பிஎஸ்என்எல் ஆபீஸ் டவர் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி வேலை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீண்டும் காலை எழுந்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக கலைமணி நேற்று கரியாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்தனர்.
Similar News
News December 22, 2025
கள்ளக்குறிச்சி: மஞ்சப்பை விருது’ மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி இன்று (டிச.22), பிளாஸ்டிக், ( நெகிழி) இல்லா வளாகம் பள்ளி, கல்லூரி,வணிக வளாகம், ஆகியவற்றுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம் இரண்டாம் பரிசாகரூ. 5 லட்சம் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாத் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை கியூ ஆர் கோட் ஸ்கேன் மூலம் பெற்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 22, 2025
கள்ளக்குறிச்சி:மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர்
ரா.ஜீவா இன்று (டிச.22) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப்
பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
News December 22, 2025
கள்ளக்குறிச்சி:டிகிரி போதும் அரசு வேலை ரெடி!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


