News April 1, 2025
விரைவில் திருமணம் ஆக செல்ல வேண்டிய கோயில்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் காயநிர்மலேஸ்வரர் கோயில் ஒரு அக்னி தலமாகும். இக்கோயிலில் உள்ள காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்குமாம். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் கோட்டை எனும் பகுதியில் இக்கோயில் உள்ளது.
Similar News
News April 6, 2025
சேலம் மாவட்டம் பிரிகிறதா..?

சேலம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் என மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் சட்டப்பேரவையில் பேசினார். அதில், சென்னைக்கு அடுத்த்படியாக 11 தொகுதிகளைக் கொண்டு சேலம் திகழ்வதாக பேசினார். அதுபடி, மேட்டூர், ஆத்தூர், சேலம் என மூன்றாக பிரிக்க வேண்டும் எனப் பேசினார். ஏற்கனவே கடந்த ஆட்சியில் எடப்பாடியை தனி மாவட்டமாக பிரிக்க பேச்சு எழுந்தது. சேலம் மக்களே இதுகுறித்து உங்கள் கருத்து?
News April 5, 2025
குழந்தை பாக்கியம் தரும் கந்தாஸ்ரமம் !

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் இயற்கை சூழ்ந்த மலைகளில் அமைந்துள்ளது கந்தாஸ்ரமம். இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கந்தனை வழிபட்டுச் செல்கின்றனர். முருகனும் அவ்ரது தாயார் பார்வதியும் எதிர் எதிர் சன்னதியில் இருப்பது இந்தக் கோயிலில் மட்டும் தான். இங்குள்ள முருகனை தரிசித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 5, 2025
பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.