News May 21, 2024

விருதுநகர்:7 கடைகளுக்கு சீல்

image

விருதுநகர் அதனைச் சுற்றியுள்ள புறநகர் ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடர்பாக காவல்துறையினர் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகரில் மே 2 முதல் நேற்று வரை தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து ரூபாய் 1.75 லட்சம் அபராதம் விதித்தனர்.

Similar News

News October 13, 2025

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பட்டாசு விற்பனை கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தடையின்மை சான்று மற்றும் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News October 12, 2025

விருதுநகர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News October 12, 2025

சாத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(55) சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்று வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சாத்தூரில் இருந்து மீனம்பட்டி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மேட்டமலை அருகே நாய் குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!