News October 25, 2025
விருதுநகர்:5 வயது சிறுமி மீது இடிந்து விழுந்த சுவர்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சேதுராயனேந்தலை சேர்ந்த ஆனந்தி 29. இவரது மகள் சமுத்திர 5.நேற்று முன்தினம் மாலை சிறுமி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Similar News
News February 14, 2026
விருதுநகர்: பைக் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி

அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தையை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் கோகுல கண்ணன்(23) உள்ளிட்ட 3 பேர் இன்று பிப்.13 ஒரே பைக்கில் சொந்த வேலையாக அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலவநத்தம் அருகே எதிரே வந்த பைக் மீது இவர்கள் சென்ற பைக் நேருக்கு நேர் மோதி கோகுல கண்ணன் & மற்றொரு பைக்கில் வந்த அருள் முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
விருதுநகர்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா.?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04562-252388 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News February 13, 2026
பைக் மீது வேன் மோதி குழந்தை உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே சின்னசெட்டிகுறிச்சியை சேர்ந்தவர் குருசாமி. இவர் நேற்று பிப்.12 மாலை பந்தல்குடியில் இருந்து தனது மகள் மற்றும் தனது பேரன் சஸ்வந்த்(3) ஆகியோரை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது சிதம்பராபுரம் சாலையில் அவ்வழியாக வந்த வேன் மோதி தாத்தாவுடன் சென்ற பேரன் சஸ்வந்த்(3) படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்


