News October 5, 2025
விருதுநகர்: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே மத்திய அரசின் (PMGKAY) என்ற திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..
Similar News
News October 10, 2025
விருதுநகர்: குழந்தைகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க
News October 10, 2025
JUST IN சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையின் போது பல ஆண்டுகளாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களுக்கு டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
News October 10, 2025
BREAKING ஸ்ரீவி: கே.டி.ஆர். வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி ஆஜராகவில்லை. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், வழக்கு விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.