News November 9, 2025
விருதுநகர்: EB பில் அதிகமாக வருகிறதா? இத பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
Similar News
News November 9, 2025
அருப்புக்கோட்டை பைபாஸ் அருகே பஸ் விபத்து

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பைபாஸ் ராமசாமிபுரம் விளக்கு பகுதியில் இன்று விபத்து ஏற்பட்டது. பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் செய்து திரும்பிய பஸ் விபத்தில் சிக்கியது. இதில், சிலர் லேசாக காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர்.
News November 9, 2025
ஸ்ரீவி: வீட்டில் மருத்துவம் பார்த்த பெண்

ஶ்ரீவி.,மங்காபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுகுணா(42). இவர் வீட்டில் வைத்து மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறைக்கு புகார் சென்றது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சுகுணா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. சுகாதாரதுறை இணை இயக்குநர் காளிராஜ் அளித்த புகாரின் பேரில் நகர் போலீஸார் சுகுணா மீது வழக்கு பதிந்துள்ளனர்.
News November 9, 2025
5 மையங்களில் 2ம் நிலை காவலர் பணிக்கு எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை காவலர் பணிக்கு ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நடைபெறுகிறது. விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் காரியாபட்டி செவல்பட்டி ஆகிய 5 மையங்களில் 7403 ஆண்களும், 2339 பெண்களும் என மொத்தம் 9742 பேர் தேர்வு எழுத உள்ளனர்.


