News August 6, 2025
விருதுநகர்: 239 பேரிடம் மோசடி செய்தவர் குண்டாஸில் கைது

சங்கரன்கோவிலை சேர்ந்த கங்காதரன் ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாகவும், மாதம் ரூ.50,000 லாபம் பெறலாம் என தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 239 பேரிடம் ரூ.12 கோடி பெற்று மோசடி செய்து ஜூலை.7 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவர் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 4, 2025
விருதுநகர்: 9 வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் ஆய்வு செய்து விதிகளை மீறி சென்ற மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு.
News November 4, 2025
விருதுநகர்: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 4, 2025
சிவகாசியில் ரூ.10 ஆயிரம் கோடி இலக்கு

சிவகாசியில் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி பாதிப்பால் பட்டாசுக்கான தட்டுப்பாடு நிலவியது. எனவே பட்டாசு தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இந்தாண்டு விரைவாகவே பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு வர்த்தகம் நடந்த நிலையில் வரும் ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி இலக்காக கொண்டு உற்பத்தியை துவக்கியுள்ளனர்.


