News August 16, 2025

விருதுநகர்: 10th போதும்.. ரூ.63,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

இந்திய கடற்படையில், டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ITI படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

Similar News

News November 5, 2025

சிவகாசி: செல்போன் கடைகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்

image

சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் கூரையை பிரித்து கடையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.11 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 2 நாட்களுக்கு முன் அருகில் உள்ள செல்போன் கடையில் திருடிய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு செல்போன் கடையில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News November 5, 2025

விருதுநகர்: இந்த எண்களை கட்டாயம் SAVE பண்ணிக்கோங்க

image

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

சிவகாசியில் தயாராகும் “5டி” காலண்டர்

image

2026 புத்தாண்டை முன்னிட்டு, சிவகாசியில் காலண்டர் உற்பத்தி விறு விறுப்படைந்துள்ளது. தினசரி காலண்டர்கள், டேபிள் காலண்டர்கள், பிவிசி காலண்டர்கள், ஆர்ட் பேப்பர் டெய்லி காலண்டர்கள், பேன்ஸி டை கட்டிங் என பல்வேறு வகை காலண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஒரே காலண்டரில் 5 கோணங்களில் வெவ்வேறு படங்களை வெளிப்படுத்தும் 5டி காலண்டர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

error: Content is protected !!