News August 16, 2025

விருதுநகர்: 10th படித்திருந்தால் ரூ.69,100 சம்பளம்

image

விருதுநகர் மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இறுதிநாள் என்பதால் இந்த <>லிங்க் <<>>மூலம் உடனே விண்ணப்பித்து புலனாய்வுத் துறையில் வேலைக்கு சேருங்கள்..

Similar News

News March 4, 2026

விருதுநகர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

வெம்பக்கோட்டை அருகே மஞ்சலோடைப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (24). இவர் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகள் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 4, 2026

கே.டி.ஆர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையை மார்ச்.13-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

News March 4, 2026

JUST IN விருதுநகர்: முன்னாள் திமுக எம்.பி விடுதலை

image

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடியதாக சேத்தூர் போலீஸார் டிராக்டர் ஓட்டுநர் முருகன், தென்காசி திமுக முன்னாள் எம்.பி தனுஷ்குமார் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவியில் உள்ள ஜே.எம் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் இருவரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!