News August 20, 2025

விருதுநகர்: வங்கியில் ரூ.64,480 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே; ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 Clerk காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இங்கே கிளிக் செய்து ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025. தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News September 12, 2025

தற்செயல் விடுப்பு போராட்டம் – 1473 ஊழியர்கள் ஆப்செண்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில், மாவட்ட முழுவதிலும் 1473 பேர் ஆப்செண்ட் ஆகினார். இதன்காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

News September 12, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – கலெக்டர் தகவல்

image

விருதுநகர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (13.09.2025) நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

விருதுநகர்: பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்..!

image

சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் மற்றும் போலீசார் 56 வீட்டு காலனி பகுதியில் உள்ள குடோனில் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோனில் சட்டவிரோதமாக 5 அட்டை பெட்டிகளில் பேன்சி வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு இருந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 32), முருகன் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!