News April 24, 2024

விருதுநகர் லோக்சபா தேர்தலில் 3,278 புகார்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஓட்டுப்பதிவு நாள் வரை மட்டும் சி விஜில் செயலி, ஆன்லைன், தொலைபேசி ஆகியவை வாயிலாக 3,278 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி பெற்ற புகார்களாக எடுக்கப்பட்ட 3059 புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.

Similar News

News January 8, 2026

BREAKING சிவகாசி தொழிலாளிக்கு 82 ஆண்டுகள் சிறை

image

சிவகாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரை
சித்தப்பா முறையான தாயின் தங்கை கணவர் ஓரண்டாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு கடந்த 2021-ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீவி.,போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 4 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் என 82 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

News January 8, 2026

விருதுநகர் அருகே ஒருவர் எரித்துக் கொலை?

image

விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே நேற்று இரவில் அடையாளம் தெரியாத ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அல்லம்பட்டியை சேர்ந்த பொன்ராஜ்(32) தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் பொன்ராஜை அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 8, 2026

விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

விருதுநகர் மக்களே இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!