News November 28, 2025

விருதுநகர்: லாரி மீது மோதிய கார் விபத்தில் இளைஞர் படுகாயம்

image

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை‌ சேர்ந்தவர் நித்திஷ்(21). இவர் நேற்று நவ.27 காரில் அருப்புக்கோட்டை சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது ராமசாமிபுரம் விலக்கில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தூத்துக்குடியில் இருந்து மதுரையில் இருந்து தூத்துக்குடி சென்ற லாரியின் மீது மோதி நித்திஷ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 28, 2025

விருதுநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமான மழை பெய்கிறது. இந்நிலையில் விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

News November 28, 2025

விருதுநகர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

News November 28, 2025

விருதுநகர்: ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

image

விருதுநகர் ரயில்வே நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தில் ரூ.30.55 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. தோரண நுழைவாயில் சுற்றுச்சுவர் கூரையுடன் கூடிய டூவிலர் கார்கள் காப்பகம், முகப்பு மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் நடை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம் சிங் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

error: Content is protected !!