News February 3, 2025
விருதுநகர் மாவட்ட பெண்களின் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் குடும்ப வன்முறைகள் 179, வரதட்சணை கொடுமைகள் 11, பாலியல் துன்புறுத்தல்கள் 10, குழந்தை திருமணங்கள் 150, திருமணத்தை தாண்டி உறவால் தகராறு 68, கட்டாய திருமணம் 31 என்ற வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் 181 இல் புகார் அளிக்கலாம் என மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
சிவகாசி மேம்பாலத்தை திறக்க கெடு விதித்த கம்யூனிஸ்ட்

சிவகாசி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவுபெற்றும் திறக்கப்படாமல் காலதாமதப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேம்பால பணிகளால் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் அக்டோபர் மாத இறுதிக்குள் மேம்பாலத்தை திறக்காவிட்டால் மக்களை திரட்டி மேம்பாலத்தை திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
News October 27, 2025
விருதுநகர்: 12th முடித்தால் அரசு பள்ளியில் வேலை., நாளை கடைசி

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. நாளை கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <
News October 27, 2025
விருதுநகர்: போஸ்ட் ஆபிஸ் வங்கி வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <


