News April 9, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் ஏப் 21 முதல் ஏப் 23 வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4-ம் தேதி அன்று அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடுவதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். எனவே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 10, 2026

விருதுநகர்: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

image

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 10, 2026

விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 10, 2026

ராஜபாளையம்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.!

image

தென்காசி மாவட்டம், திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் தளவாய்புரம் பகுதியில் சிலருடன் சேர்ந்து மைக் செட்டுகளை அவிழ்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டுஅரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!