News January 10, 2026
விருதுநகர்: பேராசிரியை நகை மாயம்: மாணவரிடம் விசாரணை

திருச்சுழி அருகே வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியை நகைகள் மாயமான வழக்கில் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்கபுரம் வேளாண்மை கல்லூரியில் பணியாற்றும் மோகனப்பிரியா (34) தனது 8½ பவுன் தங்க நகைகளை கல்லூரி நூலகத்தில் காணாமல் போனது. சிசிடிவி ஆய்வில் மாணவர் ஹரிஹரன் (19) சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து ம. ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
விருதுநகர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News February 17, 2026
சிவகாசி: தீ விபத்தில் ஒருவர் பலி

திருத்தங்கல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் முருகன்(66). திருத்தங்கல் மண்டலத்தில் தினக்கூலி தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முருகன் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த பழைய பொருட்களை வீட்டின் முன்பு போட்டு எரித்துள்ளார். அப்போது எதிர்பாராமல் தீ முருகனின் உடையில் பற்றி உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 17, 2026
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

விருதுநகரில் 2026 – 2027ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் 29.02.2026 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


