News January 10, 2026
விருதுநகர்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; பெண் கைது!

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி.இவர் வீட்டருகே உள்ள தெரு மக்களுக்கு பொதுவான காலியிடத்தை தனது இடம் என்று முருகேஸ்வரி பிரச்னை செய்து வந்துள்ளார். பின்னர் அந்த இடத்தை சர்வேயர் வைத்து அளந்து வேலி அமைத்துள்ளனர்.அந்த இடத்தில் தேங்காய் மட்டையை முத்துலட்சுமி காய வைத்ததை முருகேஸ்வரி தூக்கி எறிந்து அருவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளார்.மம்சாபுரம் போலீசார் முருகேஸ்வரியை கைது செய்தனர்.
Similar News
News January 11, 2026
விருதுநகரில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 11, 2026
சிவகாசி அருகே 16 வயது சிறுமி கர்ப்பம்…!

சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் கார்த்திக் 22. செப்டிக் டேங்க் கிளீன் செய்யும் தொழில் செய்து வரும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகினார். அவரிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பம் ஆக்கினார். இது குறித்து சிறுமி இரு மாதங்களுக்கு முன்பு சிவகாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.தலைமறைவான கார்த்திக்கை இரு மாதங்களுக்குப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News January 11, 2026
விருதுநகர்: 3 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை (துணை காவல் கண்காணிப்பாளர்) இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவி, சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜா, நாகராஜன் மற்றும் குற்றப்பிரிவு DSP இளவரசன் ஆகியோர் வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


