News November 13, 2025
விருதுநகர்: புனித பயணத்திற்கு மானியம் – ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டைச் சார்ந்த கன்னியாஸ்திரிகள்/. அருட்சகோதரிகளுக்கு (ECS) முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் மானியம் பெறலாம் – ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டைச் சார்ந்த கன்னியாஸ்திரிகள்/. அருட்சகோதரிகளுக்கு (ECS) முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
சிவகாசியில் கடையை உடைத்து கொள்ளை

சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீபன்ராஜ் (29). இவர் செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்தநிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது விலை உயர்ந்த இரு செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
சிவகாசியில் சிறுமி கர்ப்பம்; மூவர் மீது வழக்கு

திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், தனுஷ், முனீஸ் ஆகிய மூவரிடமும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முனீஸ் என்ற இளைஞர் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து மதுபோதையில் இருந்த சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமான நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் இளைஞர்கள் மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.


