News December 18, 2025

விருதுநகர்: பதட்டமான வாக்கு சாவடிகள் கணக்கெடுப்பு

image

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பதட்டமான வாக்குச்சாவடிகள், புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த கணக்கெடுப்பு பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1200 வாக்காளர்களுக்கு கூடுதலாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைப்பது பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 20, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04562-252723 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

விருதுநகர் கலெக்டர் கார் மறிப்பு

image

விருதுநகர், வத்திராயிருப்பு அருகே கீழக்கோட்டையூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர கோரி 7 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை கட்டித் தரப்படவில்லை. நேற்று முன்தினம் கலெக்டர் சுகபுத்ரா கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்திற்கு வந்த கலெக்டரின் காரை மறித்த கிராம மக்கள் 5பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News December 20, 2025

விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!