News April 18, 2024
விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்

மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 11, 2026
விருதுநகரில் மட்டுமே கிடைக்கும்…அதிசயம்!

விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே மானாவாரி பகுதிகளில் மழைக்காலத்தில் அதலைக்காய் செழிப்பாக வளர்ந்திருப்பதைக காணலாம். இதில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளின் குடற்புழுக்களை நீக்கம் செய்வதற்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். சமீப காலமாக இதன் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பிற மாவட்ட மக்களும் இதனை சமையலுக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஷேர் பண்ணுங்க
News February 11, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை

ஸ்ரீவி, கொத்தன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி பெருமாளம்மாள் கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி செத்து விடுவேன் என்று சொல்லியுள்ளார். இந்நிலையில், பெருமாளம்மாள் மகளை விடுவதற்கு சென்றிருந்த நிலையில், மாரியப்பன் காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீசார் பெருமாளம்மாளின் புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 11, 2026
சிவகாசி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை

மதுரை ஜெய்ஹிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (46). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி பிரியா (29) பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்து நிலையில் சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த லோடு வேன் டிரைவர் சங்கருடன் (27) பழக்கம் ஏற்பட்டு தனது கணவர் ரமேஷை பிரிந்து சங்கருடன் வாழ்ந்து வந்தார். இதையறிந்து மனைவி ப்ரியா, பிள்ளைகளை அழைத்து செல்ல வந்த ரமேஷை சங்கர் நண்பருடன் சேர்ந்து அடித்து கொலை செய்தார்.


