News October 1, 2025

விருதுநகர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர்

image

விருதுநகர், சிவகாசி அருகே விஸ்வநத்தம் பெரியார்நகரில் உள்ள முள்காட்டு பகுதியில் டவுன் எஸ்ஐ பாலமுரளிகிருஷ்ணா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜு மகன் கார்த்திக் (36), அந்தோணி மகன்கள் குமரேசன் (30) லட்சம் என்ற குமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 11, 2025

விருதுநகரில்‌ நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

image

விருதுநகரில் நாளை ஞாயிறு (12/10/25) போலியோ சொட்டு மருந்து 0 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கபட உள்ளது. இந்த வயதிற்குள் உட்பட்டிருந்தால் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் கொடுக்கவும். பேருந்து நிலையம் , அங்கன்வாடி மையங்கள் , இரயில் நிலையம் , ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற முக்கியமான இடங்களில் முகாம்கள் உள்ளன. SHARE பண்ணுங்க.

News October 11, 2025

விருதுநகர் மக்களே இனி அலைச்சல் இல்லை!

image

விருதுநகர் மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!

News October 11, 2025

விருதுநகர்: மகனை கொல்ல முயன்ற தாயின் இரண்டாம் கணவர்

image

விருதுநகரை சேர்ந்த மாரீஸ்வரியின் இரண்டாவது கணவரான செல்வம், முதல் கணவருக்கு பிறந்த ஆறு வயது மகனை கடத்தி, காட்டுப் பகுதியில் கழுத்தை அறுத்து, வாயில் பேனாவால் குத்திக் கொடூரமாகத் தாக்கினார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில், நாடகமாடித் தேடிய செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை.

error: Content is protected !!