News May 27, 2024
விருதுநகர்: சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் குறிப்பு!

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 480 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது வனவிலங்கு சரணாலயம். இது அதிக அளவில் சாம்பல் நிற அணிகள் வாழ்ந்து வருகின்றன. அதனால் இந்த சரணாலயம் சாம்பல் நிற அல்லது நரைத்த அணில்கள் சரணாலயம் என்றும் அழைக்கப்பட்டு வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. இந்த பகுதியில் அணில்கள் மட்டுமின்றி யானை, புலி,வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, தேவாங்கு போன்ற விலங்குகளும் வசிக்கின்றன.
Similar News
News August 23, 2025
விருதுநகரில் ரூ.5.62 லட்சம் மதிப்புள்ள கந்தகம் பறிமுதல்

பட்டம்புதூர் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் தடையில்லா சான்று பெறாமல் 16 டன் கந்தகம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து லாரி ஓட்டுனரிடம் விசாரித்த போது அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. ரூ.5.62 லட்சம் மதிப்புடைய கந்தகத்தை தடையில்லா சான்று பெறாமல் கொண்டு வந்த லாரி ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
News August 23, 2025
விருதுநகர் தவெக நிர்வாகி மறைவுக்கு விஜய் இரங்கல்

தவெக தலைவர் விஜய் இரங்கல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளிட்டுள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து K.காளிராஜ் உட்பட மூவர் மதுரை மாநாட்டில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் கழகத்திற்காக செய்த பணி என்றும் நினைவில் நிலைக்கும். குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம். அவர்களது குடும்பங்களுக்கு கழகம் என்றும் துணையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
News August 23, 2025
விருதுநகரில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. ஷேர் பண்ணுங்க.