News August 21, 2025

விருதுநகர்: காவல்துறையில் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

Similar News

News August 21, 2025

BREAKING ஆவியூரில் கடைகளை மூட உத்தரவு

image

பாரப்பத்தில் இன்று தவெக வின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதில் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மாநாட்டு பகுதியின் அருகில் உள்ள ஆவியூரில் உள்ள கடைகளில் மாநாட்டிற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி தேவையான உபகரணங்களை வாங்குவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளை மறுஅறிவிப்பு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 21, 2025

விருதுநகர்: இன்று போக்குவரத்தில் மாற்றம்

image

தவெக மாநாட்டை முன்னிட்டு இன்று போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை – மதுரை மார்க்கமாக விருதுநகர் செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாகவும், விருதுநகர் செல்லும் பொதுமக்கள் ராம்நாடு ரிங்ரோடு, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம். மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு அருப்புக்கோட்ட நகருக்குள் செல்ல அனுமதி இல்லை.

News August 20, 2025

கண்ணாடி மாளிகையில் ஆண்டாள், ரங்கமன்னார் 

image

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது  வழக்கம். இந்நிலையில் ஆவணி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

error: Content is protected !!