News September 15, 2025
விருதுநகர்: கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் பாலகுமார் என்பவர் தன்னுடைய நிலம் மற்றும் மற்றொருவரின் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து கடனை வாங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளார். விவசாயம் சரிவர இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டள்ளது. இதனால் கடனை கட்ட முடியாததால் மன உளைச்சலில் இருந்த பாலகுமார் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
விருதுநகர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி

ராஜபாளையத்தை சேர்ந்த சின்ன குருசாமி மகன் சிவா 25, கட்டட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் டூவீலரில் நேற்று மதியம் 1:30 மணிக்கு ராஜபாளையம் சென்றுவிட்டு எஸ். ராமலிங்கபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே கோதை நாச்சியார்புரம் விலக்கிற்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் பின்னால் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
News September 15, 2025
விருதுநகர்: டிகிரி முடித்தால் ரூ.35,000 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்கே<
News September 15, 2025
விருதுநகரில் ஆறு ஆண்டுகளாக அவலம்

விருதுநகர் கருமாதி மடம் எம்.ஜி.ஆர்.,சிலை அமைந்துள்ள பகுதியில் நான்கு புறங்களில் இருந்து ரோடுகள் சந்திக்கின்றன. விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சிவகாசி ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை பாலம் ஆகிய ரோடுகளில் தினசரி ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஆனால் இந்த சிக்னல் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.