News December 13, 2025
விருதுநகர் ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு.!

விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஊர்காவலர் காலி பணியிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் நிலையில் மதிப்பூதியமாக ரூபாய் 560 வழங்கப்படுகிறது.
Similar News
News December 14, 2025
சிவகாசி: முத்தம் கொடுத்து மிரட்டியவர் கைது

சிவகாசி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு திருமனமாகி மனைவி உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த +2 மாணவியை ஒரு ஆண்டாக காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன் அதை படம் எடுத்து மிரட்டி வருவதாக மாணவி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
News December 14, 2025
விருதுநகர்: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

விருதுநகர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 14, 2025
விருதுநகர்: ரயில் மோதி வாலிபர் பலி

விருதுநகர்-துலுக்கப்பட்டி ரயில்நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த கணேசமூர்த்தி (36) என் தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தார் என விசாரணையில் கூறப்படுகிறது.


