News December 18, 2025
விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 20, 2025
சிவகாசி அருகே உணவக உரிமையாளர் விபத்தில் பலி!

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் சித்தரஞ்சன் (60). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். உணவகத்திற்கு தேவையான பொருட்களை வாங்க பைக்கில் வந்துள்ளார். சிவகாசி பஜார் பகுதியில் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 20, 2025
விருதுநகர்: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

விருதுநகர் வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <
News December 20, 2025
விருதுநகர்: ஒரேநாளில் இரண்டு கொலைகள்

விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 2 கொலைகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்தியசேனையில் பட்டாசு ஆலை காவலாளியாக பணியாற்றிய செல்லச்சாமியை (57) கால்நடை தீவனம் பறிக்க வந்த படுகளம் (64) என்பவர் வெட்டி கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் ராஜபாளையம் சமுசிகாபுரத்தை சேர்ந்த வேல்முருகனை (37), மது போதையில் பாலமுருகன் (24) என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்.


