News November 25, 2025

விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 25, 2025

விருதுநகர்: வழிபறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் கைது

image

சிவகாசி பள்ளப்பட்டி ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராமர் 42. பழக்கடை நடத்தி வரும் இவர் கடையில் இருந்த போது அங்கு போதையில் வந்த திருத்தங்கல் தெற்கு தெரு சாமுவேல், முருகன் காலனி சந்தோஷ் உள்ளிட்ட சிலர் ராமரை அடித்து ரூ. 2 ஆயிரம் பறித்தனர்.மேலும் அரிவாள், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரித்து 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர்.

News November 25, 2025

விருதுநகர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

image

விருதுநகர் மக்களே சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதில் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 25, 2025

விருதுநகர்:பெண் போலீசாரிடம் தகராறு; போலீஸ்காரர் இடமாற்றம்

image

விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவருக்கும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல்நிலை பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது.கார்த்திகேயனின் மனைவி,போலீசில் புகார் அளித்ததில் பேசுவதை பெண் போலீஸ் தவிர்த்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட கார்த்திகேயன் நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

error: Content is protected !!