News November 29, 2025

விருதுநகர்: அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

image

விருதுநகரை சேர்ந்த மணி (45) என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் கம்பம் பகுதியில் சேனை ஓடையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. அப்பகுதியினர் ஓடையில் பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கம்பம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் விருதுநகர் மணி என்பது விசாரனையில் தெரியவந்தது.

Similar News

News December 1, 2025

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

விருதுநகர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலை ஓடைகளில் அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை முதல் மழை பெய்யாததாலும், ஓடைகளில் நீர் வரத்து குறைந்து விட்டதாலும் இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

News November 30, 2025

விருதுநகர்: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகரில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.

News November 30, 2025

ராஜபாளையம் அருகே கண்மாயில் காவலாளி சடலமாக மீட்பு

image

ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சோ்ந்த அம்மையப்பன் இவா் நல்லமங்கலம் கண்மாய் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்தநிலையில், கண்மாய் குத்தகைதாரா் சமையலுக்கு பொருள்கள் வாங்கிக்கொண்டு கண்மாய்க்கு சென்றாா். அப்போது, அங்கு அம்மையப்பன் இல்லை. அவரைத் தேடிப் பாா்த்தபோது கண்மாய் கலிங்கல் அருகே அவா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து குத்தகைதாரா் அளித்த தகவலின் பேரில், தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!