News April 22, 2024

விருதுநகர் அருகே விபத்து; மரணம் 

image

அருப்புக்கோட்டை ஜெயராம் நகரை சேர்ந்தவர் நாகசுந்தரேஸ்வரன் (18).காந்தி நகரில் உள்ள தனியார் டிசைனர் கம்பெனியில் வேலை செய்து வந்த நாகசுந்தரேஸ்வரன் கம்பெனியிலிருந்து நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.திடீரென நாய் குறுக்கே வந்ததால் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து நாகசுந்தரேஸ்வரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.தாலுகா போலீசார் நேற்று ஏப்ரல் 21 வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News January 10, 2026

விருதுநகர்: பேராசிரியை நகை மாயம்: மாணவரிடம் விசாரணை

image

திருச்சுழி அருகே வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியை நகைகள் மாயமான வழக்கில் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்கபுரம் வேளாண்மை கல்லூரியில் பணியாற்றும் மோகனப்பிரியா (34) தனது 8½ பவுன் தங்க நகைகளை கல்லூரி நூலகத்தில் காணாமல் போனது. சிசிடிவி ஆய்வில் மாணவர் ஹரிஹரன் (19) சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து ம. ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

சிவகாசி அருகே சாக்கு வியாபாரிக்கு நேர்ந்த சோகம்

image

சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜ் (58). இவர் பழைய சாக்கு வியாபாரம் செய்து வரும் இவர் விஸ்வநத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த முத்துக்காளை(30) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் முத்துக்காளை மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

News January 10, 2026

விருதுநகர்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

விருதுநகர் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!