News March 24, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

விருதுநகர் அருகே மூடியனுர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (21). இவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாண்டியன் நகர் பகுதியில் எதிரே வந்த காரின் மீது இருசக்கர வாகன மோதியதில் இளைஞர் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு.

Similar News

News December 10, 2025

விருதுநகர்: கப்பலில் வேலை.. 4.5 லட்ச ரூபாய் மோசடி

image

சாத்துாரை சேர்ந்தவர் ஜெயவீரன் மகன் கவி விஷ்ணு. இவர் நெல்லை தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்ற போது, அவரது ஆசிரியர் டென்சிங் டேனியல் (45), மனைவி ஷர்மிளா (32) ஆகியோர் கவி விஷ்ணுக்கு சிங்கப்பூர் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இதனை அடுத்து, ஆசிரியர் உட்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

விருதுநகரில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
2.உயர்நீதிமன்ற மதுரை கிளை : 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

விருதுநகர்: ரூ.6 லட்சம் வரை மானியம்.. நேரில் செல்லுங்கள்

image

தமிழக அரசு உழவர் நல சேவை மையம் அமைக்க 3 முதல் 6 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மீதம் தொகைக்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இது தொடர்பாக, வேளாண் இயக்குனர் கூறுகையில், காரியாபட்டி வட்டாரத்தில் வேளாண் சார்ந்து படித்தவர்கள், வேளாண் பொருட்கள் விற்பனை, வேளாண் சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாவட்ட வேளாண் உதவி மைய அலுவலகத்தை நேரில் அணுகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!