News March 26, 2024
விருதுநகர் அருகே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலியில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News February 19, 2026
விருதுநகர்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40), 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது போதையில் மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரது கையில் வெட்டியுள்ளார். இதைக்கண்ட இவர்களது மகன் சுரேந்தர் (21) தந்தை மணிகண்டனிடம் அரிவாளை பறித்து அவரையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 19, 2026
விருதுநகர்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40), 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது போதையில் மணிகண்டன் தனது மனைவி மகேஸ்வரியுடன் தகராறு செய்து அரிவாளால் அவரது கையில் வெட்டியுள்ளார். இதைக்கண்ட இவர்களது மகன் சுரேந்தர் (21) தந்தை மணிகண்டனிடம் அரிவாளை பறித்து அவரையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 19, 2026
விருதுநகரில் வாகன பொது ஏலம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 4 நான்கு சக்கரவாகனங்கள், 43 டூவிலர்கள் பொது ஏலத்தில் பிப்.25 காலை 8 மணிக்கு ஏலமிடப்பட உள்ளது. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் இந்த ஏலத்தில் ஏலம் விடக்கூடிய காவல் வாகனங்களை பிப்.18 முதல் பார்வையிடலாம். மேலும், ஏலம் எடுக்க விரும்புவர்கள் ஆயுதப்படையில் உள்ள வாகனப்பிரிவு அலுவலகத்தில் பிப்.18 முதல் ஆதார் நகல், ரூ.2000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.


