News April 25, 2024
விருதுநகர் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு

விருதுநகர் ஆணை கூட்டம் சாலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது அரசு பேருந்தை வழிமறித்த ஆனை கூட்டம் பகுதியைச் சார்ந்த வசந்தகுமார் என்ற இளைஞர் கீழே கிடந்த கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர்.
Similar News
News April 19, 2025
முழு வீச்சில் தயாராகும் பொருட்காட்சி திடல்

சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
News April 19, 2025
விருதுநகரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

▶️திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோயில்
▶️காமராஜர் நினைவு இல்லம்
▶️சஞ்சீவி மலை
▶️குக்கன்பாறை
▶️செண்பகத்தோப்பு அணில் சரணாலயம்
▶️அய்யனார் அருவி
▶️சதுரகிரி மலை
▶️பள்ளிமடம்
▶️பிளவாக்கல் அணை
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
News April 19, 2025
விருதுநகரில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

விருதுநகரில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <