News November 8, 2025

விருதுநகர்: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

image

விருதுநகரில் குரூப்-II/IIA முதன்மைத்தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நவ.10 முதல் நடைபெற உள்ளது. வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுடையவர்கள் https://forms.gle/xzgDJcXbC6zQw6H98 மூலம் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

விருதுநகர்: பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ்

image

விருதுநகரில் எஸ்.எஸ் மாணிக்கம் நகரை சேர்ந்த சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த திருச்சுழி சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த முருகன் (29) மீது மேற்கு போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை தடுக்க எஸ்.பி கண்ணன் பரிந்துரை பெயரில் ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவின் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

News November 8, 2025

விருதுநகர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

ஸ்ரீவி.: போலீசை கத்தியால் குத்தி குற்றவாளி தப்ப முயற்சி

image

சிவகாசி வடபட்டியை சேர்ந்தவர் மரியராஜ் (28). இவர் மீது பெண்கள் வன்கொடுமை புகார் தொடர்பாக ஸ்ரீவி. மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இது தொடர்பாக மரியராஜை கைது செய்து அழைத்து சிவகாசி அருகே வருகையில் அவர், கத்தியால் போலீசார் வினோத்குமாரின் கையில் குத்திவிட்டு, தானது கழுத்தில் அறுத்துக்கொண்டு தப்ப முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த இருவரும் ஸ்ரீவி. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

error: Content is protected !!