News January 15, 2026
விருதுநகர்: அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

காரியாபட்டி அருகே செவல்பட்டி பகுதியில் முன்னால் சென்ற பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற குராயூர் அருகே உள்ள மாசவணத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னாண்டி(46) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரியாபட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
விருதுநகர்: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கி வேலை

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
விருதுநகர் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பண்ணன் வயது 80. இவரின் மனைவி இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து வந்த ஆமத்தூர் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு.
News February 10, 2026
விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE


