News August 18, 2025

விருதுநகர் அரசுப் பணி: நாளை கடைசி.. உடனே APPLY

image

விருதுநகர் மாவட்டத்தில் 38 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பங்களை பதிவிறக்கி, அதனை பூர்த்தி செய்து நாளைக்குள் (ஆக. 19) அந்தந்த வட்டார அலுவலகத்தில் தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு செப். 19லும், நேர்முக தேர்வு அக். 3லும் நடைபெற உள்ளது. எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும். இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News November 5, 2025

வெம்பக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் என்ற கண்ணன்(42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

விருதுநகர்:காரின் மேல் அமர்ந்து சென்றவர்கள் மீது வழக்கு

image

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து விதிகளை மீறிய மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட உள்ளது.

News November 4, 2025

விருதுநகர்: 9 வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு

image

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் ஆய்வு செய்து விதிகளை மீறி சென்ற மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு.

error: Content is protected !!