News September 28, 2025

விருதுநகர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

image

மூவரைவென்றான் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து. இவர் லட்சுமியாபுரம் டோல்கேட்டில் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்டிடங்களை சுற்றி வந்த போது 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. உடனடியாக நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் ஆண் பிரதேத்தை மீட்டு இறந்தது யார் என விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 5, 2026

சிவகாசி: கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி ஊழியர் மீது வழக்கு

image

சிவகாசி உள்ள தனியார் ஓட்டலின் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வந்த சிவகாசி பள்ளப்பட்டி சேனையாபுரம் காலனியை சேர்ந்த ஐ.டி ஊழியர் சண்முகவேல் (வயது 24)ஏற்கனவே மதுபோதையில் இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவரை ஓட்டல் மேலாளர் காசிராஜன் (34) மதுகூடத்துக்கு செல்ல அனுமதிக்காததால் தகராறு செய்த சண்முகவேல் மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சண்முகவேல் மீது வழக்குப்பதிவு.

News January 5, 2026

விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

சிவகாசி: சிறுமிக்கு பிறந்த குழந்தை; இளைஞருக்கு வலை

image

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததாக ஊர்நல அலுவலர் மணிமாலாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணிமாலா நடத்திய விசாரணையில், 17 வயது சிறுமிக்கும் கட்டிட தொழிலாளி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சிறுமியை, அந்த தொழிலாளி பல முறை பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!